தமிழகம்

எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் “மாறிவரும் புத்துலகில் மொழியும் இலக்கியமும்: டிஜிட்டல் உலகில் படைப்பாற்றல் மற்றும் கற்றல்” எனும் கருத்தரங்கம்

94views
சென்னை, எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் இன்று (25. 04. 2026) நடைபெற்ற “மாறிவரும் புத்துலகில் மொழியும் இலக்கியமும்: டிஜிட்டல் உலகில் படைப்பாற்றல் மற்றும் கற்றல்” எனும் கருத்தரங்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ‘டிஜிட்டல் உலகில் படைப்பாற்றல் மற்றும் கற்றல்’ என்ற தலைப்பில் தொடக்க உரை ஆற்றினேன்.

கல்லூரி முதல்வர் முனைவர் தெய்வநாயகி, ஆங்கிலத் துறை பேராசிரியர் பிரேமா, சென்னை ஐ.ஐ.டி. உதவிப் பேராசிரியர் முனைவர் அனிந்திதா சாகோ, முனைவர் மங்கையர்க்கரசி, மற்றும் ஆங்கிலத் துறையின் பேராசிரியர்கள் , பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களுக்கும் கல்லூரி முதல்வருக்கும் என் கவிதைகள் குறித்து எழுதப்பட்ட அணிந்துரைகள் மற்றும் மதிப்புரைக் கட்டுரைகள் அடங்கிய ‘எளிமை போர்த்திய கவித்துவம் ‘ நூலை வழங்கினேன்.
காலத்தின் தேவையறிந்து மாணவர்களுக்கு நடத்தப்படும் இப்படியான கருத்தரங்குகளில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
பிருந்தா சாரதி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!