109views
வேலூர் மாவட்டம் பாகாயத்தில் உள்ள சி.எம்.சி ஸ்கடர் அரங்கத்தில் சி.எம்.சி செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 21.4.2026 அன்று மாலை ஐந்து மணி அளவில் சி.எம்.சி இயக்குனர் டாக்டர் பிஜு ஜார்ஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் டீன், பேராசிரியர், ஷேண்ட்ரீலா ஞானதீபம் அவர்கள் செவிலியர் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
செவிலியர் கண்காணிப்பாளர் பேராசிரியர் ஆலிஸ் சோனி அவர்கள் பட்டம் பெற்ற செவிலியர் மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் முத்திரை சின்னம் வழங்கினார்.





