தமிழகம்

அறிவியல் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்த கருத்தரங்கு

26views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, அறிவியல் கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 09.09.2024 அன்று கல்லூரியில் அறிவியல் பயிலும் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக விருதுநகர், காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, உயிரி தொழில்நுட்பம் துறை, உதவிப்பேராசிரியை, பிரதிபா கலந்துகொண்டு அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கு தயார்செய்தல் முறைகள் குறித்து பேசினார். இறுதியாக கழக இணை ஒருங்கிணைப்பாளர் காஜாமுஹைதீன் நன்றி கூறினார். நிகழ்வினை கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் ஒருங்கிணைத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!