தமிழகம்

முதுகலை ஆங்கில இலக்கிய மன்றம் துவக்க விழா

52views
முதுகலை ஆங்கில துறை சார்பாக 06.09.2024 அன்று ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது. துறை தலைவர் வர்ஷா யாஸ்மின் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுறையாற்றினார். உதவி பேராசிரியர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் செல்லத்துரை கலந்து கொண்டு ஆங்கில இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
முதுகலை ஆங்கிலத் துறை மற்றும் பிற துறை சார்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஆங்கில மன்ற ஒருங்கிணைப்பாளர் சேக் பர்சானா நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!