தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரியின் 124 -வது ஆண்டு விழா – பல்கலை கழக துணைவேந்தர்பங்கேற்பு

95views
வேலூரில் புகழ்பெற்ற ஊரீசு கல்லூரி உள்ளது. சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் துவக்கப்பட்டது.  124-வது ஆண்டு துவக்கவிழா கல்லூரி காப்ஹாலில் நடந்தது.  வேலூர் சிஎஸ்ஐ சர்ச்பிஷப் மற்றும் கல்லூரி செயலாளர் சர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.  கன்வீனர் பிரவீனா வரவேற்றார்.
கல்லூரி ஆண்டு மலரை சர்மா நித்தானந்தம் வெளியிட திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் பெற்றுகொண்டார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் நெல்சன் விமலநாதன், பர்சர் காலேப் நோபல் சந்தர், துணை முதல்வர்கள அன்பழகன், சத்யபிரசாத் குமார்,துறை தலைவர்கள் பிரேம்ராஜ் பென்ஜமின், காலின் கிரிப்ஸ் பின், போராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், கல்லூரி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் திருமாறன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!