தமிழகம்

ராஜபாளையத்தில் தொடங்கி உள்ள மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 12 மாவட்டங்களில் இருந்து 237 பேர் பங்கேற்றுள்ளனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இரண்டு நாட்கள் இப் போட்டிகள் நடைபெறுகிறது.

122views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் சதுரங்க கழகம் சார்பில், காமராஜர் நகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் இன்று பிற்பகலில் தொடங்கியது. இந்த போட்டிகளில் விருதுநகர், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து 237 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஓப்பன் டோர்னமென்ட் முறையில் 8 சுற்றுக்களாக போட்டிகள் நடைபெறுகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஸ்விஸ் லீக் முறையில் நடைபெறும் போட்டிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இன்று ஒற்றையர் போட்டிகளும், நாளை இரட்டையர் போட்டிகளும் நடைபெறுகிறது. மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையுடன் ரூ. 36 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
மேலும் 9, 12 மற்றும் 15 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!