தமிழகம்

செய்திகள்தமிழகம்

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலை

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 3-வது கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே.ராஜன் கூறியதாவது, நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. நீட் குறித்து சிலர் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அனைத்து கருத்தகளும் ஆராயப்பட்ட பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்துக் கருத்துகளும் நன்கு ஆராய்ந்து ஒருமாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்....
Uncategorizedசெய்திகள்தமிழகம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்

அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை அமைச்சா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியில் மாணவா்கள் கற்றல், கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள், அவா்கள் தயாரித்த உபகரணங்களை பாா்வையிட்டாா். பின்னா், தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களைப் பாராட்டி அமைச்சா் கூறியது: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் பெருமை என்கிற நிலையை தற்போது பாா்க்க முடிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோக்க இருகரம் கூப்பி அழைப்பு விடுக்கிறேன். சிபிஎஸ்இ வழியில் படித்து வந்த மாணவா்கள்கூட அரசுப் பள்ளியில்...
செய்திகள்தமிழகம்

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் 100% ஊழியர்களுடன் வங்கிகள் இன்று முதல் வழக்கம்போல செயல்படும்

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அனைத்து வங்கிக் கிளைகளும் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் வரும் ஜூலை 5-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், கரோனாதொற்று அதிகம் உள்ளவை, குறைவாக உள்ளவை என மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பாதிப்பு அதிகம் உள்ள கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் 28-ம் தேதி (இன்று) முதல் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். இந்த மாவட்டங்களில் வாடிக்கையாளர் பரிவர்த்தனை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், வங்கி...
செய்திகள்தமிழகம்

மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் பரிந்துரை

சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் லாரிகள் கழிவுநீர் விடுவதை தடுக்க, அத்தகைய விதிமீறலில் ஈடுபடும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட போரூர், அதைச் சுற்றியுள்ள பகுதியில் விதிகளை மீறி கழிவுநீர் லாரிகள், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை குடிநீர் வாரியம் தாக்கல்...
செய்திகள்தமிழகம்

ஊடகங்கள் மீதான வழக்குகள் வாபஸ் அறிவிப்பு: முதல்வருக்கு ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு பாராட்டு

ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் `இந்து' என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்தித்தனர். அப்போது, கடந்த 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு அளித்த பதில் உரையில், ``கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்'' என்று அறிவித்து, ஜனநாயகத்தின் அடிநாதமான பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்காக தங்களது...
செய்திகள்தமிழகம்

மீனவர்களுக்கு தனி வங்கி உருவாக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி. உறுதி

மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் பேசி முயற்சி மேற் கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கும் பணிக்கு கனிமொழி எம்.பிஅடிக்கல் நாட்டினார். 12 மீனவர்களுக்கு ரூ.5.05 லட்சம் மானியத்தில் நாட்டுப் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிறைவேற்றும் விதமாக திமுக அரசு செயல்படுகிறது. பல திட்டங்களை...
செய்திகள்தமிழகம்

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருத்து

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என,கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிடவில்லை. இதுபற்றி எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும், முதல்வர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கிறது. வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும், மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் அரசு ஈடுபட வேண்டும். சட்டப்பேரவையில் எங்களின் கருத்துகளை சொல்வதற்கும் இடம் வேண்டும். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களைத்தான் தமிழக அரசு குழுவில் நியமித்துக் கொள்ளும் என்றால், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்துதான்...
செய்திகள்தமிழகம்

ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் செயல்களை பாஜக வேடிக்கை பார்க்காது: மாநில செயற்குழுவில் தீர்மானம்

இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடுவிளைவிக்கும் எந்த செயலையும் பாஜக வேடிக்கை பார்க்காது என்றுபாஜக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நேற்றுநடந்தது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள குழு உறுப்பினர்கள் ஆங்காங்கே இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவினர், மத்திய அரசு என்பதற்கு பதிலாக'ஒன்றிய அரசு' எனும் சொல்லைபயன்படுத்துகின்றனர். பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''மாநிலங்களால் ஆனது இந்தியா. அரசியலமைப்பு சட்டத்தில் 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்றே இந்தியா வரையறுக்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது. 'இந்தியா பல மாநிலங்களைக் கொண்டதாக இருக்கலாம்' என்றே அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா தனது நிர்வாகவசதிக்காக தன்னை மாநிலங்களாக பிரித்து அரசாளும் என்பதே...
செய்திகள்தமிழகம்

பெட்ரோல், டீசல் இன்றும் அதிரடி உயர்வு – தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரூ.100ஐ தாண்டி விற்பனை

கொரோனா லாக் டவுன் காலத்திலும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.19 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 93.23 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு...
செய்திகள்தமிழகம்

‘உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்’ – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டப்பேரவை தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலாயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட 9 மாவட்டங்களில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு மாவட்டச் செயலாளர்கள் தயார் நிலையில் இருக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும், 38 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி சபைகளுக்கான தேர்தலில் கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பது...
1 420 421 422 423 424 441
Page 422 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!