தமிழகம்

செய்திகள்தமிழகம்

தெலங்கானாவில் இருந்து ரயிலில் நெல்லைக்கு 2600 டன் ரேஷன் அரிசி வருகை

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் நெல்லைக்கு 2600 டன் ரேஷன் அரிசி வந்து சேர்ந்தது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒன்றிய தொகுப்பில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் டன் கணக்கில் வாரம்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தெலுங்கானா மாநிலம் திட்டப்பள்ளி என்னும் இடத்தில் இருந்து ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 2,600 டன் அரிசி மூடைகள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. மொத்தம் 42 ரயில் பெட்டிகளில் 52, 917 மூடைகளில் வந்த ரேஷன் அரிசியை ரயிலில் இருந்து இறக்கிய தொழிலாளர்கள் பின்னர் லாரிகளில் ஏற்றி நெல்லைபுரம் நுகர்பொருள் சேமிப்பு கிட்டங்கி நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இவை அங்கிருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு...
செய்திகள்தமிழகம்

டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் 132 ஏக்கர் பரப்பளவில் உள்ள சி.வ.குளம் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்து பணிகள் நிறைவு பெறும் காலம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தோம். உள்ளாட்சித்...
செய்திகள்தமிழகம்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசம் – மா.சுப்ரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்துவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனால் 12 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி பலியாகின்றனர். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதற்கான தடுப்பூசியாக நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் போடும் பணியினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தோம். தினந்தோறும் எழும்பூர்...
செய்திகள்தமிழகம்

ஓ.பி.எஸ் வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அடைந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாதென அறிவிக்கக்கோரி, போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான மிலானி என்பவர், தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. இதே மனுதாரர், ஏற்கெனவே தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது....
செய்திகள்தமிழகம்

2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் விநியோகம்: 32 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து மருத்துவ பயன்பாட்டுக் கான ஆக்சிஜன் விநியோகம் 2,000 மெட்ரிக் டன் என்ற அளவை நேற்று கடந்தது. இதுவரை 2,006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் உச்சத் தில் இருந்தபோது மருத்துவ ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அங்கு, மே 13-ம் தேதி மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதலில் தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன்...
செய்திகள்தமிழகம்

+2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

தமிழகத்தில் +2 மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு தோவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அனைத்து மாணவா்களும் தோச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களுக்கான மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாணவா்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவா்களும், தனித் தோவா்களும் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தோவெழுத அரசு அனுமதித்துள்ளது. இவர்களுக்கான தேர்வு செப்டம்பா் அல்லது அக்டோபா் மாதத்தில் நடத்தப்படும். +2 மதிப்பெண் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ...
செய்திகள்தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஜிபிஎஸ் கருவிகளைக் கொள்முதல் செய்யப் போடப்பட்ட உத்தரவுக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுத்துவந்தார். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிர்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு உயர்த்திட வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 20) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: "தமிழகத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு உயர்த்தவும், இருபோக சாகுபடி நிலங்களை 10 லட்சம் ஹெக்டேரிலிருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும், கிராம வாரியாக நிலங்களைக் கணக்கெடுத்து, சாகுபடிக்குத் தேவையான அனைத்துப் பாசன வசதிகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப, விதைகள், ரசாயன உரங்கள்...
செய்திகள்தமிழகம்

5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது ஜூலை 22, 23 24 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்துள்ளது. கிண்டி, வடபழனி வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. கோவை...
செய்திகள்தமிழகம்

முதலைமைச்சர் தலைமையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின்றன

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், 82 ஆயிரத்து 400 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, லாஜிஸ்டிகஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, Capital land, Adhani, JSW உள்ளிட்ட நிறுவனங்களும் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன. இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். அதுமட்டுமின்றி, 14 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்....
1 417 418 419 420 421 441
Page 419 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!