தமிழகம்

செய்திகள்தமிழகம்

நாட்டில் மீண்டும் உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 44,230 பேருக்கு தொற்று; 55 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதால் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில்...
செய்திகள்தமிழகம்

2300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வெள்ளி நாணயம்: உறுதிப்படுத்தும் நாணயவியல் ஆய்வாளர்

பண்டைய கால தமிழர்கள், வடநாட்டு மௌரியர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கீழடியில் கிடைத்துள்ள வெள்ளி நாணயம் உறுதிப்படுத்துவதாக நாணயவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழடி அகழ்வாராய்ச்சியில் சமீபத்தில் வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இது கி.பி. 303 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த நாணயத்தின் முன்புறத்தில் கொம்புகளைக் கொண்ட எருதின் தலை, கதிர் இல்லா சூரியன், வால் சுருட்டிய நாய், ஆறு வகையான ஆயுத அமைப்பை கொண்ட சக்கரம், கதிருடன் உள்ள சூரியன், மாடு ஆகிய 6 சின்னங்கள் உள்ளன. அதேபோல் வெள்ளி நாணயத்தின் பின்புறத்தில் அரை வட்டம் காணப்படுகிறது. அதில் பாதி வடிவம் உள்ளதால் அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர் நாணயவியல் ஆய்வாளர்கள். அதேபோல் வட இந்தியாவை ஆண்ட மௌரியர்கள் வெளியிட்டதுதான் மகதா நாணயம். இதன் மூலம் தமிழர்களும்...
செய்திகள்தமிழகம்

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தேர்வு நடைபெறாமல் இருந்தது. உச்சநீதிமன்றம் இதற்காக சிபிஎஸ்இ நிர்வாகம் மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திற்கு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தனர். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக முடிவினை எடுக்க அறிவுறுத்தி இருந்தனர். கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், இடைநிலை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதன் அடைப்படையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான +2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பிராமண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற உறுதிப்பாட்டையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்...
செய்திகள்தமிழகம்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஜூலை 31-ம் தேதி பாராட்டு விழா: இணைய வழியில் நடக்கும் என அறிவிப்பு

பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்தபிப்ரவரி 26-ம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணமான ராமதாஸுக்கு பாமக,வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்துஅமைப்புகளின் சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இட ஒதுக்கீட்டுக்கான எல்லா புகழும் ராமதாஸையே சாரும். அவருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் விரும்புகின்றனர். ஆனாலும், கரோனா ஊரடங்குசூழலில் அத்தகைய விழா தவிர்க்கப்பட வேண்டும் என்பதால்பாமக, வன்னியர் சங்கம், சமூகமுன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளன. வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குஇந்த பாராட்டு விழா நடக்கும்.விழாவின் நிறைவாக ராமதாஸ்ஏற்புரையாற்றுகிறார். இதில்ஆயிரக்கணக்கானோர் இணைய...
செய்திகள்தமிழகம்

அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு காற்று மாசு; சென்னையில் உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்: ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை

சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு வரை காற்று மாசு உயர்ந்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை அரசு பலப்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது. 'ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி' என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தியாகராயநகர் உள்ளிட்ட 20 இடங்களில் கடந்தபிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்றுத் தர பரிசோதனையை நடத்தியது. ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவுகொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (PM2.5) 60 மைக்ரோகிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட 4 மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாக அந்த...
செய்திகள்தமிழகம்

நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை.

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு செமஸ்டரில் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும், டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் ஜனவரி 19-2022ம் தேதி அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ...
செய்திகள்தமிழகம்

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாககோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாகமேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 28-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில்...
செய்திகள்தமிழகம்

போக்குவரத்து துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடி உத்தரவு.!!

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ நேற்று தலைமைச்‌ செயலகத்தில்‌, போக்குவரத்துத்துறை மூலம்‌ மேற்கொள்ளப்படும்‌ பல்வேறு திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்தும்‌, அடுத்த 10 ஆண்டுகளில்‌ செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள்‌ குறித்தும்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, போக்குவரத்துத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ சேவைகள்‌ குறித்தும்‌, போக்குவரத்துத்துறை அலகுகளின்‌ செயல்பாடுகள்‌, குறிப்பாக 8 தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌ ஆய்வு செய்த முதலமைச்சர்‌, அரசுப்‌ பேருந்துகளின்‌ பராமரிப்பினை மேம்படுத்திடவும்‌, தடங்களை மறுஆய்வு செய்து, பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ பேருந்து சேவை மற்றும்‌ வசதியினை மேம்படுத்திட வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்தினார்‌. பொதுப்‌ பேருந்து போக்குவரத்து அமைப்பு, பேருந்து சேவைகள்‌, போக்குவரத்துக்‌ கழகங்களுக்கு புதிய பேருந்துகள்‌ ஒதுக்கீடு செய்வது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ நிதிநிலை செயல்பாட்டுத்‌ திறன்‌, நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய திட்டங்கள்‌...
செய்திகள்தமிழகம்

பா.ஜ.வை பகைத்து கொள்ளாமல் அரசியல் செய்ய தி.மு.க. விரும்புகிறது என்று நாம்

பா.ஜ.வை பகைத்து கொள்ளாமல் அரசியல் செய்ய தி.மு.க. விரும்புகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.வை முதன்மை எதிரியாக கட்டமைத்து அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது பா.ஜ. செல்கிற பாதையில் செல்வதும் அக்கட்சியுடன் மென்மையான போக்கை தி.மு.க. கடைப்பிடிப்பதும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பா.ஜ.வை வலிமை கொண்டு எதிர்த்து அரசியல் செய்யாமல் பா.ஜ. செய்யும் அரசியலுக்குள் கரைந்து போகும் தி.மு.க.வின் செயல்பாடுகள் பிழைப்பு வாதமாக உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் கூறப்பட்ட ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்தியதைத் தாண்டி தி . மு . க . அரசு பா . ஜ . வை எதிர்த்து வீரியமாயச் செய்த அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்....
செய்திகள்தமிழகம்

மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு: அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்ற மூத்த தமிழறிஞரான முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நேற்று (ஜூலை 25) இரவு காலமானார். அவருக்கு வயது 94. இறுதி நிகழ்ச்சிகள் இன்று மாலை (ஜூலை 26) 4 மணிக்கு மதுரை திருநகர் இராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, உடல் நல்லடக்கம் நடைபெறும். மறைந்த தமிழறிஞர் இரா.இளங்குமரனாருக்கு இளங்கோவன், பாரதி ஆகிய 2 மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். பேத்தி முத்தரசி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிறாற்றுகிறார். வாழ்க்கை குறிப்பு முதுமுனைவர் இரா.இளங்குமரனார் 30.1.1927-ல் நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை படிக்கராமு, தாயார் பெயர் வாழவந்தஅம்மை. இளம் வயதிலேயே சொந்தமாக பாடல் இயற்றும் அளவுக்கு தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்ற இவருக்கு 19 வயதிலேயே (4.8.1946) சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி...
1 416 417 418 419 420 441
Page 418 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!