தமிழகம்

செய்திகள்தமிழகம்

2,200 மாநகர பேருந்துகளில் நவம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,200 மாநகர பேருந்துகளில் வரும் நவம்பருக்குள் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும்,பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தாக்கத்துக்குப் பிறகுபயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், கரோனாவுக்கு முன்பு இருந்ததைப்போன்று மாநகர பேருந்துகளில் பயணிகள் வருகை இல்லை. பேருந்துகளில் நகை, செல்போன் உள்ளிட்டவை திருட்டு போனால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் மூலம் புகார் கொடுக்க நடத்துநர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தினோம். இருப்பினும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம்...
செய்திகள்தமிழகம்

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை தீவிரம்

கேரளாவில் இருந்து ரயில்கள் மூலம் வரும் பயணிகளுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், தமிழக எல்லையோரப் பகுதிகளில் கரோனாபரிசோதனை மற்றும் கண்காணிப்புபணிகள் மாநில சுகாதாரத் துறைமூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா உட்பட 7 விரைவு ரயில்களில் வரும் பயணிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதேபோல் கன்னியாகுமரி, தேனி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக அளவில் கேரளாவில் இருந்து வருகிறார்கள். அவர்களின் ஆதார், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். கரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால், அவர்களுக்கு கரோனாபரிசோதனை கிடையாது. இதுதொடர்பாக...
செய்திகள்தமிழகம்

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு!!

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டனர். அதே போல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10, 11ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியானது. அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு ப்ளஸ் 2 தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது . அதன்படி தனித் தேர்வர்களுக்கான ப்ளஸ் 2 துணைத் தேர்வு நேற்று ( 06.08.21 ) தொடங்கி 19 ஆம்தேதி வரை நடைபெறுகிறது . இந்நிலையில் தற்போது 10 மற்றும் 11 ஆம்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு?- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி நீட்டிக்கப்பட்ட ஊரடங்குஆக.9-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்தக் கட்டஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில், கடந்த மே மாதம் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டன. இதற்கிடையே, திடீரென தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதாலும், அண்டை மாநிலங்களில் 3-வது அலையின் தாக்கம் அதிகரித்ததாலும், ஜூலை 31-ம் தேதி காலை முதல் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அத்துடன் அதிக அளவில் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களை மூடவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆக.9-ம் தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்குவரும்...
செய்திகள்தமிழகம்

4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 7, 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும்,9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 6 மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில...
செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் வரும் 7-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை, நீலகிரி, கோவை, சேலம், மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 7, 8-ம் தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்....
செய்திகள்தமிழகம்

சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு எனக் கூறி போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு: பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்

மோசடி நபர்கள் சிலர், சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவிமற்றும் சிலிண்டரின் எடை அழுத் தத்தைக் கண்டறிவதற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளை பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றுஎண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ரப்பர் குழாய் பரிசோதனை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பொருத்தப்பட்டுள்ள ஆரஞ்சு நிற ரப்பர் குழாயை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து, மாற்ற வேண்டும். அதேபோல, ரெகுலேட்டர் மற்றும் காஸ் அடுப்பு ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணியை வாடிக்கையாளர்களின் ஏஜென்ட்கள் மேற்கொள்வார்கள். அவர்கள் இப்பணியை மேற்கொள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு முன், அவர்கள் வரும் விவரத்தை சம்பந்தப்பட்டஏஜென்சிகள்,...
செய்திகள்தமிழகம்

27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணமும் அதற்கான விதை போட்டதும் நாங்கள் தான் ..!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணம் அதிமுக தான் எனவும் அதற்கான விதை நாங்கள் போட்டது என்றார். இட ஒதுக்கீட்டிற்காக அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொண்டதாகவும், அதிமுக தொடர்ந்த வழக்கிலேயே மற்ற கட்சிகள் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் துரும்பை கூட எடுத்து போடாத திமுக வரலாற்றை திசைதிருப்புவதாகவும் கூறினார். மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தது எனவும், இனி இது போன்ற சம்பவங்கள் அதிமுக எம்.பிக்கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்....
செய்திகள்தமிழகம்

தமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை விளக்கம்

''தமிழக விவசாயிகளை காக்கவே, தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அவரது சிலைக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்காக பாடுபட்ட எந்த தலைவரின் வரலாறும், தமிழக பாடத் திட்டத்தில் இல்லை. தமிழக வரலாற்றில் தீரன் சின்னமலை, அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற குணாளன் நாடார், பொல்லான் என பல நுாறு பேர் இல்லை. இதுபோன்றவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்.வரும் 5ம் தேதி நான் தஞ்சையில் உண்ணாவிரதம் இருப்பது கர்நாடக அரசு, கர்நாடக முதல்வரை எதிர்த்து அல்ல.அங்குள்ள காங்., தலைவர் சித்தராமையா, சிவகுமார் போன்றோரும், 'மேகதாது அணை கட்டுவதை தமிழகத்துக்கு ஏன் கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும்' என கேட்பதை...
செய்திகள்தமிழகம்

வருகிற 13-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் ?

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு 3 நாட்கள் சட்டசபை நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதி நாளன்று முதல்vர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதிலளித்து பேசினார். கடந்த மாதம் 24-ந்தேதியுடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் தயாரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதன் பிறகு ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்தினார். சுமார் 30 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் முடிந்தது. இதைத் தொடர்ந்து நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. பட்ஜெட்டில்...
1 414 415 416 417 418 441
Page 416 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!