தமிழகம்

தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் அளித்த நற்சான்று: வைகோ

'ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி; ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்று' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். அவரது அறிக்கை: நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 138 இடங்களையும்; 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 1021 இடங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் கடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அகரம் எழுதினர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரித்திர வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றி. ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள்.  ...
தமிழகம்

விஜயதசமி நாளான இன்று முதல்.. ஊரடங்கில் கூடுதல் தளர்வு.. வார இறுதி நாட்களில் திறக்கப்பட்ட கோவில்கள்

இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் வெள்ளிக்கிழமையான இன்று காலை முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டு உள்ளது. இதுவரை, சுமார் இரண்டரை மாதங்களாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எந்த ஒரு வழிபாட்டுத் தலத்திற்கும் இதுதான் விதி முறையாக இருந்தது. கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இந்த நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடி வைப்பது என்பது தமிழக அரசின் முடிவாக இருந்தது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி.. தமிழக அரசு உத்தரவு! இந்த நிலையில் வார இறுதி...
தமிழகம்

தமிழக அரசு அதிரடி! ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!!

பண்டிகை காலங்களையொட்டி, கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைப் பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை செய்துள்ளது . இது தொடர்பாக , மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் , தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி , ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . ஆயுதப்பூஜை , சரஸ்வதி பூஜை போன்ற விழாக் காலங்களையொட்டி , மக்கள் பெரிதளவில் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது , ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணத்தை வசூலிக்க வாய்ப்பிருப்பதால் , தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சோதனைகளை மேற்கொள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ,...
தமிழகம்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்: சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்

ரூ.5,965 கோடி செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் பெரிய துறைமுகங்களுக்கு இணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடி 'கதி சக்தி' என்ற திட்டத்தை இன்று (நேற்று) தொடங்கி வைத்துள்ளார். சாலை, இருப்புப் பாதை, துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் இதுவாகும். 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை துறைமுகத்தின் இணைப்புக் கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ரூ.779 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில், துறைமுக சாலைகள் இணைப்புத் திட்டத்துக்காக ரூ.600 கோடி, கடலோர சாலைப் போக்குவரத்து வசதிக்காக ரூ.66 கோடி, கடலோர...
தமிழகம்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

1965-ம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். 'வெண்ணிற ஆடை' படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. 200-க்கும் படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார். சுமார் 50 படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ராஜா வெங்கட்ராமன் என்ற தனது பெயரை, சினிமாவிற்காக ஸ்ரீகாந்த் என மாற்றிக் கொண்டவர். ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில் தான் இவரும் அறிமுகமானார் என்பதால், இவர் ஜெயலலிதாவிற்கும் மிக நெருங்கிய நண்பர் ஆவார். வெண்ணிற ஆடை, நாணல், ராஜபார்ட் ரங்கதுரை, அன்புத்தங்கை, வைரம், பைரவி, தங்கப்பதக்கம், நூற்றுக்கு நூறு,...
தமிழகம்

விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பா? முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை குறைந்து வருவதை தொடர்ந்து நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனிடையே, பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், வியாபாரிகள்,பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்குவதா அல்லது இதே நிலையை தொடர்வதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய...
தமிழகம்

சசிகலா சிறை முறைகேடு வழக்கில் கர்நாடக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு வில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் சலுகைபெற்றதாக புகார் எழுந்தது. இதை விசாரித்த சிறைத் துறை டிஐஜி ரூபா, சசிகலா சலுகைகளை பெறுவதற்காக டிஜிபி சத்திய நாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 2019-ம் ஆண்டு இதை விசாரித்த, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, 'சசிகலாசிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை' என அறிக்கை அளித்தது. இதையடுத்து சத்திய நாரா யண ராவ், கிருஷ்ணகுமார் மற்றும்சசிகலாவுக்கு நெருக்கமானவர் கள் மீது ஊழல் தடுப்பு பிரிவுபோலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். அதன்பின் சத்திய நாராயணராவ், கிருஷ்ணகுமார் மீது அக்டோபர் 8-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஸ்...
தமிழகம்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்லும் முதியோரை குறிவைத்து நூதன முறையில் மோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி(59), நேற்று முன்தினம் காலை செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் ராஜேஸ்வரியை அணுகி, ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு, அவரை தனியாக அழைத்து சென்றுள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் போலீஸார் அபராதம் விதிப்பார்கள் என்றும், தங்க நகைகளை கழற்றி பையில் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேஸ்வரி தங்க நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கி ராஜேஸ்வரியின் பைக்குள் வைப்பதுபோல ஏமாற்றி, அவரது கவனத்தை திசை திருப்பி 12 பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு, தனது பையில் நகைகள் இல்லை என்பதை அறிந்த ராஜேஸ்வரி, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல்...
தமிழகம்

ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம்

கிராம வரைபடங்களை, ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியம்.கணினியில் பதிவேற்றம்இந்நிலையில், சர்வே எண் வாயிலாக நில அளவை வரைபடங்களை பெறுவதும்; குறிப்பிட்ட சர்வே எண், சம்பந்தப்பட்ட கிராமத்தில் எங்கு அமைந்துள்ளது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.இதற்கு நில அளவை துறையை அணுகி, கிராம வரைபடங்களை பெற வேண்டும். இதற்காக நில அளவை துறை, 16 ஆயிரத்து 721 கிராமங்களின் வரைபடங்களை தயாரித்து உள்ளது. வரைபடங்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், கிராம வரைபடங்களுக்காக, நில அளவை துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய சேவையை நில அளவைத்துறை...
தமிழகம்

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அகழாய்வு பணி..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதன்பின் கடந்த 1903 மற்றும் 1904-ம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது 600 சதுர மீட்டர் அளவில் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் 160-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழாய்வு பணி துவங்கியுள்ளது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துள்ளார். திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளன. அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
1 400 401 402 403 404 441
Page 402 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!