உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் அளித்த நற்சான்று: வைகோ
'ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி; ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்று' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். அவரது அறிக்கை: நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 138 இடங்களையும்; 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 1021 இடங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் கடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அகரம் எழுதினர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரித்திர வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றி. ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள். ...