தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் சரக்கு லாரி வாடகைக் கட்டணம் 20% உயர்வு: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்
தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளதால், சரக்கு லாரிகளின் வாடகைக்கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கலால் வரிஉயர்வு, மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை மேலும், உயர்ந்து வருகிறது. இதனால், டீசல் விலை தமிழகத்தில் முதல்முறையாக ரூ.100.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, லாரி உரிமையாளர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறிகள், மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்...