காட்பாடியில் நெடுஞ்சாலைதுறையினர் அலட்சியம் : மழைநீர் தேங்கல்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான கால்வாய்கள் உள்ளன. பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைதுறையினர் அதை தூர்வாருவது கிடையாது. இதன் காரணமாக மழைநீருடன் கழிவுநீர் தேங்கி பஸ் நிலையத்தை நாறடிக்கின்றன. இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் சுகாதாரபணியாளர்கள் கழிவுநீர் வாகனம் மூலம் நீரை அகற்றினர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...