செய்திகள்

தமிழகம்

காட்பாடியில் நெடுஞ்சாலைதுறையினர் அலட்சியம் : மழைநீர் தேங்கல்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான கால்வாய்கள் உள்ளன. பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைதுறையினர் அதை தூர்வாருவது கிடையாது.  இதன் காரணமாக மழைநீருடன் கழிவுநீர் தேங்கி பஸ் நிலையத்தை நாறடிக்கின்றன.  இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் சுகாதாரபணியாளர்கள் கழிவுநீர் வாகனம் மூலம் நீரை அகற்றினர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை கிருஸ்துமஸ் முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலிப்பு

வேலூரில் புகழ்மிக்க வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை முகப்பு பகுதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துகொண்டு உள்ளது.  வரும் 25-ம் தேதி உலகம் யேசுபிரான் பிறந்தநாளை கிருஸ்துமஸாக கிருஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில்மாநகர புதிய நீதிக்கட்சியின் செயற்குழு கூட்டம் : தலைவர் ஏ. சி.சண்முகம் பங்கேற்பு

வேலூர் மாநகர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநகர புதிய நீதிக்கட்சியின் செயல்வீரர்களின் கூட்டம் நடந்தது.  மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  மாவட்ட செயலாளர் பரத், வேலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்தி, மாநகர செயலாளர் குமரகுரு மற்றும் செயற்குழுவை சேர்ந்தவர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட புதிய...
தமிழகம்

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. டிச-4 ஆம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய வட தமிழக பகுதிகளை புயல் நெருங்கும். டிச-5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டிணம் இடையே புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அருட்தந்தை அருள்சேகர் முயற்சியில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் இசை உலா போட்டி

இன்று (02.12.23) வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புது முயற்சியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை. அருள்சேகர் முயற்சியில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் இசை உலா போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இல்ல தந்தை சுந்தர் பிரான்சிஸ் துவக்க ஜெபம, வரவேற்புரை ஆற்றினார். அருட்தந்தை. பால்ராஜ், அருட்தந்தை லூக்காஸ் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான டி. நோபல் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டு...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கை

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழகத்தில் 2000 காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி மற்றும் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி ஆகியோரின் அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 24-க்கும் மேற்பட்ட பகுதிகளில காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த முகாமை மாநகராட்சி மருத்துவ அலுவலர் மார்க்ஸ் காஸ்ட்ரோ மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார், ஆகியோர் பார்வையிட்டனர்.  காய்ச்சல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது....
தமிழகம்

காட்பாடிக்கு வந்த முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளித்த திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மற்றும் துணை மேயர் சுனில்குமார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு பகுதியாக பேனா வடிவில் முத்தமிழ் தேர் எனும் பெயரில் வாகனம் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டு உள்ளது.  இந்த முத்தமிழ் தேர் வேலூர் மற்றும் காட்பாடிக்கு வந்தது.  காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வந்த முத்தமிழ் தேரை வேலூர் திமுக எம்.பி.கதிர் அனந்த், துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகர...
தமிழகம்

உலக பத்திரிகையாளர்கள் தினம்; மதுரை வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்; வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வாசன் கண் மருத்துவமனையுடன் மதுரை செய்தியாளர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆப் மதுரை, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் & தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தினர் இணைந்து இந்த முகாமை நடத்தினர். வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். வரும்...
தமிழகம்

உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் விழிப்புணர்வு பிரச்சார பேரணி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு கூட்டம்

தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு மாநகர தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு) தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், மாவட்டத் தலைவர் ஜாகீீர் ஆலம், மமக மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ் பாஷா பங்கேற்றனர். தமுமுக மாநகர செயலாளர் அப்சர் பாஷா, மமக மாநகர செயலாளர் ஜபி முன்னிலை வகித்தனர்.  மாநகர மமக துணைச்செயலாளர் காலித், பிஸ்மில்லா நகர் கிளை...
1 43 44 45 46 47 584
Page 45 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!