செய்திகள்

தமிழகம்

கணிப்பொறி அறிவியல் பயின்ற மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, கணிப்பொறி அறிவியல் துறை மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனம் இணைந்து 2020-2025 வரை கணிப்பொறி அறிவியல் பயின்று பட்டம் பெற்ற மாணவ-மாணவியருக்கு மென்திறன் பயிற்சி 10.07.2024 மற்றும் 11.07.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. கணிப்பொறி அறிவியல் துறை ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். நிகழ்வில் மேஜிக் பஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் மாணவ-மாணவியருக்கு...
தமிழகம்

வேலூர் அடுத்த ரங்கா புரத்தில் பி என்எஸ் நவீன ஓட்டலை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

வேலூர் அடுத்த ரங்காபுரத்தில் பி என்எஸ் அதிநவீன ஓட்டலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  இதில் வேலூர் எம். பி. கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் மேயர் சுஜாதா, திமுகவின் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது.  ஏற்பாடுகளை உரிமையாளர் திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் மாணவியர் பேரவையை துவக்கி வைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில், மாணவியர் பேரவை துவக்க விழா நடைபெற்றது.  வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  கல்லூரி தலைவி, துணைத் தலைவி, செயலாளர், வகுப்பு துறை மாணவதலைவிகள், குழுக்களின் பொறுப்பாளர்கள், பொறுப்புகளை ஏற்றனர். கல்லூரி செயலாளர் மேரி ஜோஸ்வின் ராணி தலைமை தாங்கினார். இதில் தேர்வாணையர் வின்சி, துணை முதல்வர்கள் அமலா வளர்மதி, சுமதி மற்றும்...
தமிழகம்

காட்பாடி சமூக நல திட்டதாசில்தாரராக பொறுப்பேற்ற லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

வேலூர், ஜூலை 13: வேலூர் அடுத்த காட்பாடி சமூக நல திட்ட தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்ட லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம் சார்பில் வட்ட துணைத் தலைவர் நிவேதா குமாரி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன், பிரச்சார செயலாளர் விநாயகம், காட்பாடி வட்டத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் இளங்கோவன், துணை செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட விஏஓக்கள்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரதுறை சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் !

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம் 2.0 தலைப்பில் பள்ளி மாணவிகளுக்கு வீடுகளில் சேர்க்கும் குப்பைகளில் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும் என்றும், தெருக்கள் மற்றும் கால்வாய்களிலோ குப்பைகளை கொட்ட கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.  பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்....
தமிழகம்

பேர்ணாம்பட்டில் கந்து வட்டி கொடுமையை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கந்து வட்டி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டி கொடுமையால் பேர்ணாம்பட் பகுதியில் தற்கொலை செய்த தாய் மகன் விசயத்தில் காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும். வேலூர் மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடித்து பேர்ணாம்பட் நான்கு கம்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்ட...
தமிழகம்

உற்சாகமாக நடைபெற்ற மாவட்டசெயலாளர்கள் கூட்டம்!

ஜூலை.12. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் ஏற்காட்டில் Friday inn விடுதியில் எழுச்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு முதல் நாள் இரவே மாவட்ட செயலாளர்கள் தங்குவதற்கான விரிவான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் மாவட்டச் செயலாளர்கள் மலையடிவார மகிழ்ச்சி மற்றும் அமைதியான சூழலை அனுபவிக்கும் நோக்கோடு முதல் நாள் இரவிலேயே ஏற்காட்டிற்கு வருகை தந்தனர். முன்னதாக சேலம் மாவட்ட மஜக...
தமிழகம்

தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னையில் மடைபெற்ற சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் திரு.அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் திரு.அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் திரு.வசீகரன் சென்னை எழும்பூரில் உள்ள திரு.அழகு முத்து கோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி மற்றும் மாநில குழு உறுப்பினர் திருமதி ஸ்டெல்லா மேரி, மாநில...
தமிழகம்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை மீட்க கோரி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்

சென்னையை சேர்ந்த பரதன் என்பவர் சவூதி அரேபியாவில் கடந்த 14 ஆண்டுகளாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டு உள்ளார் அந்த சகோதரர் பரதன் விசயத்தில் உடனடியாக தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் புரைதா இஸ்மாயீல் அவர்கள் மற்றும் இந்திய மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர், அக்ரம் ஜாவித் மற்றும் நிர்வாகிகள் இன்று தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். 5 வருவாய் கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.  வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு,...
1 22 23 24 25 26 583
Page 24 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!