தமிழகம்

தமிழகம்

ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள், பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து வருகின்றனர் என்ற செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பயணிகளின் குறைகளைப்போக்க நில நிர்வாகக்கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டிஆகியஅரசு உயர் அலுவலர்களை  நேரடியாக  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கண்ணப்பர் திடல் சமூக நலக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அப்பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக ரயில் வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசால் ஒருங்கிணைந்து நடவடிக்கை...
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவித்து அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு தமிழக அரசுஅறிவித்தது. இந்தநிலையில், ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அவசரகால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. மேலும், 9498181236, 9498181239 ஆகிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டு பெருநகர காவல் துறையின் உதவியை நாடலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிய மைத்தது. கடந்த 7ம் தேதி முதல்வராகப்பதவி யேற்ற ஸ்டாலின், முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அதைச்சரிப்படுத்த கொரோனா நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது. ரூ 4000 நிவாரண நிதியாக வழங்கத்தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக ரூ2000 வழங்கும் திட்டத்தை இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கிவைக்கிறார். இந்நிலையில் 15ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்டமாக வழங்கப்படும், ரூ,2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் தொடங்க உள்ளது....
தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு ஏழுபேர் விடுதலை. திமுகவுக்கு வைகோ கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்வை கோதிமுக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இது சமம்ந்தமாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:- தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழுபேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாக வேமனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோல வேநளினி, ரவிச்சந்தின், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தும் ஆளுநர் அந்தக்கோரிக்கையை...
தமிழகம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்தார். அதன் படி இன்று அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும், 118 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினரும் வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 360 இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்....
தமிழகம்

முழு முடக்கத்தால் இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊர் செல்லும் மக்கள்!

நாளை முதல் முழு முடக்கம் அமலுக்கு வருவதால் சென்னையில் இருந்து மக்கள் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர். கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு முடக்கங்ளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி. மின் வணிக நிறுவனங்கள் மூலம் பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் ஆகியவை மதியம் 12 மணி வரை விநியோகிக்க அனுமதி. மளிகை, பல சரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில்...
தமிழகம்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி, பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கும் விதமாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்யும் இயந்திரந்தில், பல இடங்களில் கைரேகைகள் சரிவர பதிவாகவில்லை. இதனால், ஆதார் அட்டையில் மீண்டும் கைரேகையை பதிவுசெய்து கொண்டு வரும்படி ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆதார் மையத்தில் கைரேகையை பதிவு செய்யச் சென்றால், அதற்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. அதன்பின்பு மீண்டும் ரேஷன்...
தமிழகம்

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (78) கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்மபக் கால கட்டத்தில் மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடக்குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையை துவங்கினார் திலக். அதை தொடர்ந்து 1981-ம் ஆண்டு வெளியான 'கல்தூண்' என்கிற படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து தன்னுடைய திரைவாழ்க்கையை துவங்கினார். அன்று முதல் இவரை சினிமாவில் பலரும் 'கல்தூண்' திலக் என்றே அழைக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', 'பேர் சொல்லும் ஒரு பிள்ளை', 'வெள்ளிக்கிழமை விரதம்' போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்தார். தமிழ் சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கல்தூண் திலக், பெரும்பாலும் வில்லன் வேடங்களையே ஏற்று நடித்தார்....
தமிழகம்

அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் – ஒபிஎஸ் குற்றச்சாட்டு

அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வென்றுள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாக்குவாதம் நடைபெற்றுள்ளது. முடிவில் எந்தவித முடிவும் எடுக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றிருந்தனர். அப்போது இரு தரப்பு தலைவர்களின் தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தான் என மெரினாவில் கோஷம் எழுப்பினர். தேர்தல் தோல்வி தொடங்கி ஒருவருக்கு ஒருவர் இரு தரப்பினரும் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர். தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதியிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக...
தமிழகம்

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கொல்லாம் அனுமதி

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 10 -ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கின்போது, பின்வரும் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. * அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை...
1 537 538 539 540 541 544
Page 539 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!