தமிழகம்

செய்திகள்தமிழகம்

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசனத்துக்காக 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய காலத்தில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்கு நேற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சதாசிவம், துணைஆட்சியர் வீர் பிரதாப் சிங், நீர்வளஆதாரத் துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் (மேல் காவிரி வடிநில வட்டம், சேலம்) ஜெயகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்வாய் பாசனத்துக்கான தண்ணீரை சேலம் ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை...
செய்திகள்தமிழகம்

உணவகங்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!!

ஹோட்டல்களில் கொரோனா விதிகளுக்கு எதிராக 50%க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2ஆவது அலை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவல் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரம் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை கடந்த ஞாயிறு அன்று முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்த நிலையில், நேற்று மாவட்டந்தோறும் ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த , வரும் 9 ஆம் தேதி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது . அண்டை மாநிலங்களிலும் , தமிழகத்தின் சில பகுதிகளிலும் , நோய்த் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில்...
செய்திகள்தமிழகம்

அதிரடி உத்தரவு! நாகை மாவட்டத்தில் கடற்கரைக்கு செல்லத் தடை!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கையா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள்அமலுக்கு வர உள்ளன. கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக சென்னையிலுள்ள உணவகங்கள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் இன்று முதல் வரும் வரும் 9 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகை , வேதாரண்யம் , கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திதி கொடுக்க பொதுமக்கள்...
செய்திகள்தமிழகம்

3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில், நடைபெற்ற, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, முன்களப் பணியாளர்கள் மற்றும் நலச்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொற்று அதிகரிக்கிறது என கூற முடியாது என்றார். 3-வது அலை வந்தாலும், எதிர்கொள்ளும் வகையில் கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாக கூறினார். முக கவசம் அணிவத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் பொறுப்பை உணர்ந்து முறையாக விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாநில எல்லைகளில் வருவாய்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, காவல்துறை இணைந்து பரிசோதனை மேற்கொண்ட பின்னரே பயணிகளை...
செய்திகள்தமிழகம்

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்யும் பணியை சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று தொடங்கி வைத்தார். கோட்டை, கொத்தளங்களுடன் உள்ள பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததைஅடுத்து, அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட மேலாய்வின்போது கருப்பு, ஊதா வண்ணவளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்றகண்ணாடி படிகம், குறியீடுகளுடன்கூடிய பானை ஓடுகள் கிடைத்தன. மேலும், தட்டு, கிண்ணம், கலயங்களின் உடைந்த பகுதிகள், உருக்கு உலையின் அடிமானங்கள், உலோகக் கழிவுகளும் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்தபச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருப்பு, இளமஞ்சள் வண்ணங்களில் மணிகள் கிடைத்தன. தொடர்ந்து, பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வு செய்யும் பணி...
செய்திகள்தமிழகம்

“தனியார் பள்ளிகள் இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்” : நீதிமன்றம் அதிரடி!!

நடப்புகல்வியாண்டில்தனியார் பள்ளிகள்  85 சதவீதகல்விகட்டணத்தைவசூலித்துக்கொள்ளசென்னைஉயர்நீதிமன்றம்அனுமதிவழங்கியுள்ளது. மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பு கல்வியாண்டில் தனியார்கள் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார் . 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 6 தவணைகளாக கட்டணத்தை வசூலிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . கட்டணம் செலுத்தாதை காரணம் காட்டி , மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கவோ , ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவோ தடை விதிக்க கூடாது என அறிவுறுத்திய நீதிபதி , கட்டணம் செலுத்தாத காரணத்தால் , மாணவர்களை நீக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை...
செய்திகள்தமிழகம்

நாட்டில் மீண்டும் உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 44,230 பேருக்கு தொற்று; 55 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதால் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில்...
செய்திகள்தமிழகம்

2300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வெள்ளி நாணயம்: உறுதிப்படுத்தும் நாணயவியல் ஆய்வாளர்

பண்டைய கால தமிழர்கள், வடநாட்டு மௌரியர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கீழடியில் கிடைத்துள்ள வெள்ளி நாணயம் உறுதிப்படுத்துவதாக நாணயவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழடி அகழ்வாராய்ச்சியில் சமீபத்தில் வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இது கி.பி. 303 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த நாணயத்தின் முன்புறத்தில் கொம்புகளைக் கொண்ட எருதின் தலை, கதிர் இல்லா சூரியன், வால் சுருட்டிய நாய், ஆறு வகையான ஆயுத அமைப்பை கொண்ட சக்கரம், கதிருடன் உள்ள சூரியன், மாடு ஆகிய 6 சின்னங்கள் உள்ளன. அதேபோல் வெள்ளி நாணயத்தின் பின்புறத்தில் அரை வட்டம் காணப்படுகிறது. அதில் பாதி வடிவம் உள்ளதால் அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர் நாணயவியல் ஆய்வாளர்கள். அதேபோல் வட இந்தியாவை ஆண்ட மௌரியர்கள் வெளியிட்டதுதான் மகதா நாணயம். இதன் மூலம் தமிழர்களும்...
செய்திகள்தமிழகம்

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தேர்வு நடைபெறாமல் இருந்தது. உச்சநீதிமன்றம் இதற்காக சிபிஎஸ்இ நிர்வாகம் மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திற்கு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தனர். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக முடிவினை எடுக்க அறிவுறுத்தி இருந்தனர். கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், இடைநிலை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதன் அடைப்படையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான +2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பிராமண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற உறுதிப்பாட்டையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்...
செய்திகள்தமிழகம்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஜூலை 31-ம் தேதி பாராட்டு விழா: இணைய வழியில் நடக்கும் என அறிவிப்பு

பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்தபிப்ரவரி 26-ம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணமான ராமதாஸுக்கு பாமக,வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்துஅமைப்புகளின் சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இட ஒதுக்கீட்டுக்கான எல்லா புகழும் ராமதாஸையே சாரும். அவருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் விரும்புகின்றனர். ஆனாலும், கரோனா ஊரடங்குசூழலில் அத்தகைய விழா தவிர்க்கப்பட வேண்டும் என்பதால்பாமக, வன்னியர் சங்கம், சமூகமுன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளன. வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குஇந்த பாராட்டு விழா நடக்கும்.விழாவின் நிறைவாக ராமதாஸ்ஏற்புரையாற்றுகிறார். இதில்ஆயிரக்கணக்கானோர் இணைய...
1 519 520 521 522 523 544
Page 521 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!