“உன்னால் முடியும்” – திருச்சி கே கள்ளிக்குடியில் உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழா
திருச்சி கே கள்ளிக்குடி உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் உன்னால் முடியும் என்ற தலைப்பில் மாணவர்களை உற்சாகப்படுத்தி திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வீரமணி சிறப்புரையாற்றினார் முன்னதாக என். ஆர் .ஐ.ஏ.எஸ் அகடமி இயக்குனர் விஜயாலயன் வரவேற்றார். மேலும் பயிற்றுநர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இங்கு கடந்த 19 ஆண்டுகளில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஐஏஎஸ் ,ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்...
