தமிழகம்

தமிழகம்

கீழப்பாவூர் பகுதியில் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு நடத்தும் தென்னிந்திய அளவிலான 4ஆம் ஆண்டு ஆண்கள், பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி ஜன.27 துவங்கி 29 வரை 3 நாட்கள் கீழப்பாவூரில் நடைபெறுகிறது. இப்போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டுக்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.சுபா தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் விளையாட்டுக் குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் விளையாட்டு குழுவின் கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு தலைவர் சு.மனோகரன், கௌரவ தலைவர் ச.செல்வன், தென்காசி மாவட்ட கபடி கழக செயலாளர் நல்லாசிரியர் அருள் இளங்கோவன், விளையாட்டுக்குழு துணைத் தலைவர் கே.பி.சுரேஷ், செயலாளர் ஜி.வைகுண்டராஜ், சட்ட ஆலோசகர் கே.ஆர்.பி.பிரபாகரன், பொருளாளர் பொ.அருணாசல முத்துச்சாமி, துணைச் செயலாளர் இசக்கிமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வி, கா.ராஜாமணி, ஆர்....
தமிழகம்

சிவகாசியில், ரத்த தான முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. அனந்தப்ப நாடார் தெரு, பாரதி பஜனை மண்டபத்தில், கிங் மேக்கர் சமூக நல இயக்கம் மற்றும் சிவகாசி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாமை, சிவகாசி நகராட்சி முன்னாள் சேர்மனும், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஞானசேகரன் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அய்யனார் தலைமையில் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு ரத்த தான முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை கிங் மேக்கர் சமூக நல இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ராஜபாளையத்தில், வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில், வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி துவக்கி வைக்கப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகள் வழியாக, காந்தி சிலை வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் சேத்தூர், சேவுகபாண்டியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சிவகாசி அருகே, வீட்டிற்குள் புகுந்து 60 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே நாளில், அடுத்தடுத்து இருந்த 4 வீடுகளுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம், தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (67). இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததையறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகைள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் இதே பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (62) என்பவரது வீட்டில் இரண்டரை கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 800 ரூபாய் பணமும் திருட்டு போனது. இதே போல சிவசிதம்பரம் (29) என்பவரது வீட்டிலிருந்து 2 கிராம் தங்க நகை திருடு போனது. மேலும்...
தமிழகம்

மதுரையில் வழிகாட்டி மணிகண்டனுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.  ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதன்படி மதுரையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூக சேவைகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகள் மற்றும் பசுமை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வழங்கி வாழ்த்தினார். மேலும் இந்த விருது...
தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சோனியா – கலைஞர் கொண்டுவந்த சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த வேண்டும் தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம். தமிழக காங்கிரஸ் தலைவர் -கே.எஸ்.அழகிரி

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டம் தேவை பற்றி மக்களிடையே பரப்புவதற்காக திராவிட கழகம் இன்று கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர் அதில் கலந்து கொள்வதற்காக நான் வந்துள்ளேன். சேது சமுத்திரம் திட்டம் என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் . அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்று இருந்தபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே தென் தமிழகத்திற்கு சேது சமுத்திர திட்டம் வேண்டும் என சொல்லி இருக்கின்றனர். எனவே தமிழர்களின் ஒட்டுமொத்த விருப்பம் இது. சேது சமுத்திர திட்டம் 2500 கோடி ரூபாய் திட்டத்தில் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் செலவு செய்த பிறகு. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.  அந்தத் திட்டம் நிறுத்துவதற்கு சொல்லப்பட்ட...
தமிழகம்

மதுரை அவனியாபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

மதுரை அவனியாபுரத்தை அடுத்த அயன் பாப்பா குடி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் 14ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் தினமான இன்று அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு, அனைத்து நியாய விலை கடைகளிலும் தரம் உயர்த்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை – அரிசி வேண்டாத பொதுமக்கள் ரேசன்கடைகளில் தகவல் தெரிவிக்க – கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை

மதுரை திருநகரில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடியினை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு. பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி நவீன மயக்கம் ஆக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டேன்.  இதற்காக நிர்வாக இயக்குனர் மற்றும் ஜே ஆர் ஐயோருக்கு பாராட்டுதலை தெரிவிக்கிறேன்.  கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டு அமைச்சர்களின் செயல்படுகிறது இந்த ஆண்டு விவசாய கடனுக்காக பத்தாயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் 14 லட்சத்தி 84 ஆயிரம் பேருக்கு சுமார் 10,290 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 939 பேர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு 1417.12 கடன் வழங்கப்பட்டுள்ளது. நூறாண்டும் மே 24ஆம் தேதி முதல் குருவை நெல் சாகுபடி தொடங்கப்படும் இந்த ஆண்டு குருவை மற்றும் சம்பா நெல்...
தமிழகம்

பிரதமர் மோடியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் கே வி பள்ளி மாணவி அஸ்வினி “தேர்வுகள் குறித்து பெற்றோர்கள் தங்களிடம் கருத்து திணிப்பு குறித்து கேட்ட பதில்-மாணவி பேட்டி.

மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலாய பள்ளி + 2 மாணவி அஸ்வினி சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி-  திருப்பரங்குன்றம் பகுதியில் கேந்திரிய வித்யாலாய பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து...
தமிழகம்

சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் வெள்ளாவி கருப்பணசாமி பொங்கல் விழா கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் பாரம்பரியமான வெள்ளாவி கருப்பசாமி பொங்கல் விழா அறுபத்தி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில் உள்ள வெள்ளாவி...
1 296 297 298 299 300 546
Page 298 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!