கவிதை

கவிதை

புனித நதிகள் ?

அத்தாவுல்லா, நாகர்கோவில். தரிசனங்களின் திருமுகங்கள் என்கிறார்கள் ... புனிதங்களின் நீர்த்துறைகள் என்று பூசுகிறார்கள்... உங்களுடைய சுவனங்களின் கடைதிறப்பு அகோரிப் பிணங்களின் ஆடம்பர ஆட்டங்களிலா ஆரம்பமாகிறது ? ஆன்மீகம் சுமந்த ஆற்றுப்படுகைகள் எல்லாம் இப்போது இங்கே பிணம் சுமந்த சேற்றுப்படுகைகளை விட மோசமான நாற்றப்படுகைகள் ஆகிவிட்டன ... உங்கள் புனித நதிகளில் புனிதர்கள் வந்து நீராடிப் போகட்டும் பாவம் மனிதர்கள்... இந்த அப்பாவிகள் விட்டு விடுங்கள்.... கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும்...
கவிதை

ஆதலால் காதலிப்பீர்…

அத்தாவுல்லா நாகர்கோவில். ஒரு பூ புரட்டிப்போட்டு விடுகிறது இந்தப் பூலோகத்தை ... ஒரு புன்னகை தடுமாறச் செய்து விடுகிறது கடின மனப் பாறைகளை ... ஒரு மென்னதி தடை மேடுகளையும் கடந்து எல்லைகளைத் தாண்டியும் பாய்கிறது தடுப்பணைகள் இல்லாமலே.... நிலவுக்கும் கதிருக்குமான சூட்டுத் தன்மைகள் கூட உணர முடியாமல் செய்து விடுகிறது ஒரு நட்சத்திரச் சிதறல்... சின்னச் சின்ன அசைவுகளும் இசைவுகளும் உலகையே நகர்த்திக் கொண்டிருக்கின்றன ... யார் எவருக்காகவும்...
கவிதை

காதலும் கண்ணியமும்

(கலிவிருத்தம்) காதலில் கனிந்த குருவிகள் இரண்டு மோதலு மற்ற மகத்துவ வாழ்வு! நூதனக் கூட்டை நுட்பமாய்க் கட்டி சோதனை யிலுமே கண்ணியம் தவறா! துதிக்கையை உயர்த்தி தலையிலே வைத்து மதியையும் தீட்டி களிறுகள் பிடிகள் இதயமே நடுங்கும் இடியொலி எழுப்பி எதிரியை துரத்தும் கண்ணியம் மாறா பெண்களை ஆண்கள் பண்பினால் அணைத்துக் கண்டதும் கொண்டக் காதலைப் புரிந்து கண்ணியத் துடனே கருத்துடன் பழகி எண்ணில டங்கா எண்ணமே தவிர்த்து சொல்லிலே...
கவிதை

பரங்குன்றம் எனும் ஒற்றுமை மன்றம் …

அத்தாவுல்லா நாகர்கோவில் அறுநூறு ஆண்டுகள்.... தோழமை உணர்வுகள்.... பரங்குன்றம் - அன்றே பலரும் அணைந்த ஒற்றுமை குன்றம் ... சிக்கந்தர் பாதுஷா தர்கா இஸ்லாமியப் பெரியார் அடக்கவிடமாம்.... அதற்காக குன்றத்து வேலன் ஒரு நாளும் கோபித்துக் கொண்டதே இல்லை... இருவரும் இரு வேராய் இருந்தும் இதுவரை அங்கே எழவில்லை பிரிவின் வேர்... அவரவர் உரிமை அவரவர் வழிபாடாய் இருவர் பாடும் இனிய பாடம்... பரங்குன்றம் இஸ்லாமும் இந்துவும் ஒன்று சேர்ந்து...
கவிதை

நதியின் நீதி

ராசி அழகப்பன் நகர்ந்து கொண்டே இருக்கிறது நதியும் வாழ்வும் .. சில சமயம் நதிகளில் மலர் கொள்ளை வாழ்வில் மனக் கொள்ளை.. இழக்காமல் எதுவும் கிடைப்பதில்லை என்கிறது நீதி தானே இழப்பின் அது என்ன நீதி என்கிறது மனிதம் பூக்கும் மரங்களில் வண்டுகள் முற்றுகை… வண்டுகளை ஆராய பூவுக்கில்லை வேற்றுமை.. வாழ்க்கையே அனுமதிக்காமல் வந்தேறி வலுப்பெறுகிற எண்ணங்களால் வேதனை நதிகள்… திசைகளை தேடி பயணிப்பதில்லை.. தானே திசையாகி தடம் பதிக்கிறது.....
கவிதை

உடைக்க முடியாத பெரியார்…

உடைத்துப் போடுவதற்கு நீயென்ன வெறும் வண்ணக் கலவையா...? அழுக்கு சித்தாந்தங்களின் ஆரியக் கொழுப்பை உருக்கி எடுத்தத் தமிழரின் உடைவாள் அல்லவா ...? சாதிகளை உடைத்து சனாதனத்தின் மேல் போர் தொடுத்து சண்டாளத்தனங்களைத் தகர்த்தெறிந்து சிறுமைகளைக் கண்டு செருப்பாலடித்துச் சீர்படுத்தி மதக் கீழ்மைகளை மாண்டழியச் செய்து மக்கள் மனங்களில் புரட்சிக்கனல் ஏற்றிய நீயென்ன வெறும் வண்ணக் கலவையா? தமிழர் மனங்களின் என்றென்றும் மாறாத எண்ணக்கலவை அல்லவா ...? உன்மீதா கோபம் அவர்களுக்கு...
கவிதை

அப்படியப்படியே இருந்திருக்கலாம்…

யார் யார் என்று தெரிந்தும் தெரியாதது போல் இருந்தோமே அப்படி... உறவினர் என்று தெரிந்தும் உறவில்லாமலே இருந்தோமே அப்படி... உரிமைகள் உண்டு என்று அறிந்தும் உதறிக்கொண்டு நடந்தோமே அப்படி... எப்போதைக்கெப்போதோ பேசிக்கொண்டாலும் பேசிக்கொள்வது இல்லை போல இருக்கிறது என்று மற்றவர் நினைக்க பேசாமலே கடந்தோமே அப்படி... பார்த்தாலும் மவுனமாக மனக்காயப்படாமல் இருந்தோமே அப்படி... மவுனவிரதம் பூட்டியும் பூட்டிக் கொள்ளாமலும் மலர்ச்சிகளைக் காட்டியும் காட்டிக் கொள்ளாமலும் மறு மறு புறங்களில் நின்றோமே...
கவிதை

அன்று!

அப்பா உங்கள் உழைப்போ.. அதிகம் அம்மா உங்கள் அன்போ.. அதிகம் அண்ணா உங்கள் பாசம்.. அதிகம் அக்கா உங்கள் பரிவும் அதிகம்.. அதிகம்! தங்கை உனக்கோ கனவுகள் அதிகம்‌‌.. தம்பி உனக்கோ காட்சிகள் அதிகம்.., ஊரே உனக்கு உறவுகள் அதிகம்.. உன்னை சுற்றி கோயில்கள் அதிகம்.. ஆறே உனக்கு பாய்ச்சல்கள் அதிகம் ஆடுகள் மேய்க்க புல்வெளி அதிகம் ஏரிகள் நிறைய வயல்வெளி அதிகம் ஏறும் மலைமேல் மரங்கள் அதிகம்! ஆயா...
கவிதை

பொங்கல் கவிதை : 2

பருத்திக்கொட்டை புண்ணாக்கு மட்டும் இல்லை சில நேரம் அகத்திக்கீரை கட்டுமாக செல்லமாகத்தான் இருந்தது எங்கள் லட்சுமி.. அம்மாவின் அதிகபட்ச வெள்ளிக்கிழமைகள் சாம்பிராணி வாசத்துடன் மனக்க ஆரம்பிக்கும் கடைக்குட்டி தம்பிக்கு மாற்றந் தாயாக லட்சுமி மாறிப்போனதில் ஒரு சுற்று பெருத்தே விட்டது எங்கள் வீடு அப்போது … கல்யாண சீதனமாக வீட்டிற்கு வந்ததிலிருந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறது அம்மாவைப் போல லட்சுமி… பால்காரம்மா ஊரை இப்படி அழைக்க நாங்கள் மட்டும் லட்சுமி...
கவிதை

கண்மூடிய புத்தனின் சரிந்த சிரம்

உவகையின் உயிரறுந்து அந்தரத்தில் தொங்கும் நடுராத்திரிப் பிணம் வாழ்வு முக்கிச் சொட்டும் மூத்திரத்தின் இறுதித் துளிதான் என் பசும்பச்சைக் காலம் உறிஞ்சி செறித்துத் தள்ளிய கசடென கணக்கிறது ஜீரணமாகாத சில நினைவுகள் ரணமான மனதிற்கு கண்ணீரைக் களிம்பிடுவதால் மரத்துப்போகுமா வலி ? துரோகத்தின் துர்நாற்றதில் அனிச்சம் பூ அன்பை முண்டமாய் துடிக்கவிட்டுவிட்டு கண்மூடிய புத்தனின் சரிந்த சிரம்போல சிரிக்கிறது என் நரம்பறுந்த நம்பிக்கை நிகழ்பாரதி...
1 2 3 4 16
Page 2 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!