தமிழகம்

தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் புத்தக தின விழா

52views
தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் புத்தக தின விழா நடந்தது. இதில் தலை சிறந்த கல்வியாளர்கள் பலர் பங்கேற்று புத்தக தினம் குறித்தும், புத்தக வாசிப்பு குறித்தும் ஊக்குவிக்கும் வகையில் உரை நிகழ்த்தி உறுதியேற்றனர். தென்காசி வ உ சி வட்டார நூலக வாசகர் வட்டம், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு சாலிஸ், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புத்தக தின விழா தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் நடைபெற்றது. விழாவிற்குத் தமிழ்நாடு மாநில சதுரங்க வீரர் மாநில சதுரங்க பயிற்சியாளர், சதுரங்கபோட்டி நடுவர் ஆங்கில ஆசிரியர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணை தலைவர்கள், எழுத்தாளர் அருணாசலம், தென்காசி கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்புரை ஆற்றினார்.
வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் பக்ருதீன் அலி அகமது, நூலகத்தில் வாசகராக சேர்ந்து நூலகத்தில் பயின்று ஆசிரியராகியுள்ள திருமலை குமார், போட்டி தேர்வு பயிற்சி மாணவர் முத்து மணிகண்டன் ஜெயராம், மேலகரம் பள்ளி மாணவர் யஷ்ந்த் குரு உள்ளிட்டோர் உலக புத்தக தினம் குறித்தும் வாசிப்பு இயக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் புத்தக வாசிப்பு உறுதி மொழியை ஏற்றனர். புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் புதிய புத்தகம் இலவசமாக வழங்கி புத்தக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி, நிஹ்மதுனிஸா, வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, சலீம், முகமது மீரான், முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். கிளை நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!