தமிழகம்

கெங்கவல்லி ரத்ததான முகாம்

177views
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூரில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில், கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்களும்,கெங்கவல்லி ஒன்றிய கழக செயலாளர் திரு. சித்தார்த்தன் அவர்களும், ரத்ததானம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கெங்கவல்லி வட்டாட்சியர் திரு. வெங்கடேஸ்வரன் கெங்கவல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.திரு. வேலுமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. பிரகாஷ் கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் சு.லோகாம்பாள், துணை தலைவர் மருதாம்பாள், கவுன்சிலர்கள் முருகேசன், தங்கபாண்டியன், அருண்குமார், சையது,ஹம்சவர்தினி குமார்,சத்யா செந்தில் ,லதா,கவிதா மற்றும் பாலசுப்பிரமணியம், செல்வ கிளிண்டன்,மூர்த்தி, ராஜேந்திரன், சந்துரு ,மணி, உள்ளிட்ட திமுகவினரும், ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!