தமிழகம்

வாடிப்பட்டியில் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

200views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலுக்கு இணங்க பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி வரவேற்றார். சசிகுமார், வேல் செழியன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட , மண்டல், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!