தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி பேச்சு

52views
நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி உரை :
நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.  ஆன்லைன் சூதாட்டத்தினால் பலரும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதனை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் இன்னும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெரும்பான்மையாக ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருக்கிறார்.  இதனால் உயிர் இழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எந்த விதத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் இந்த மசோதாவை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட கிட்டத்தட்ட 22 மசோதாக்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தமிழக சட்டசபையை மட்டுமல்ல, எட்டு கோடி தமிழர்களையும் அவமதிக்கக் கூடிய செயல்.
ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஆளுநரை ஒன்றிய அரசு வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத் தலைவருமான நவாஸ்கனி உரையாற்றினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!