தமிழகம்

மதுரை மாநகராட்சி மற்றும் சிஎஸ்ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் எடுக்கப்பட்ட “சித்திரை திருவிழா 2023”

88views
“தூங்கா நகரம் இனி தூய நகரம்” மக்கள் தன்னெழுச்சியாக மதுரையை தூய்மையான நகரம் என்ற இலக்கை அடைய மதுரை மாநகராட்சி மற்றும் சிஎஸ்ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் எடுக்கப்பட்ட திருநகர் பக்கம்,தி மதுரை வாலண்டீர் குழு, ரோட்டரி மதுரை ஹெரிடேஜ் சங்கம், யங் இந்தியன்ஸ், ரேடியோ சிட்டி இணைந்து இந்த ஆண்டு “சித்திரை திருவிழா 2023” தூய்மையான சித்திரை திருவிழா என்ற உறுதி மொழியோடு சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நேதாஜி சாலை மாநகராட்சி வளாகத்தில் இருந்து தொடங்கி, கோரிப்பாளையம், அரவிந்த் கண் மருத்துவமனை, கணேஷ் தியேட்டர், செல்லம் சோப், தெப்பக்குளம் நடன கோபால நாயகி சுவாமிகள் பள்ளி வரையில் சென்று சுற்று நிறைவு செய்து, பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ், விழிப்புணர்வு டி சர்ட், மஞ்சள் தோள் பை வழங்கி சிறப்பிக்கபட்டது.
தமிழக அரசு துறை சார்பில்  மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காளான் அவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வினோத் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை வழி நடத்தி சென்ற சிஎஸ்ஆர் பள்ளி நிர்வாக இயக்குநர்கள் CR வெங்கடேஷ் அவர்கள் மற்றும் பூர்ணிமா வெங்கடேஷ், பள்ளி முதல்வர் மாறன், சீதாலட்சுமி பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா குமாரி, மதுரை வாலண்டீர்ஸ் கிளப் டுகாத்தி அவர்கள், திருநகர் பக்கம் விஷ்வா, ரேடியோ சிட்டி RJ நாகா, மதுரை சைக்கிள் கிளப் உரிமையாளர்கள் குட்டி, சரவணன்,செந்தில் மற்றும் மதுரை சமூக நல ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!