தமிழகம்

காட்பாடிக்கு வந்த ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் – ஓடிஸா வாலிபர் கைது

49views
காட்பாடி ரயில்வே காவல்துறையை சேர்ந்த எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் தலைமையில் காவலர்கள் ரங்கன், சுதர்ஸன், ஆகியோர் கொண்ட குழு ஹெளராலிலிருந்து எஸ்வந்த்பூர் ரயிலில் சித்தூர் ரயில்நிலையத்திலிருந்து காட்பாடி ரயில்நிலையம் வரை சோதனை செய்தபோது,  பொதுப்பெட்டியில் பயணிகள் சீட்டுக்கு அடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 9 பண்டல்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை கடத்தி வந்த ஓடிஸா மாநிலம் டேஷருறு கிராமத்தை சேர்ந்த நமந்தா குடேய் (23) என்ற வாலிபனை கைது செய்தது என்ஐபி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தான் வேலை செய்யும் கம்பெனியில் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!