வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மார்ச் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.விழா தலைமை கல்லூரி முதல்வர் முனைவர் சாந்திதேவி. இதில் கலந்து கொள்வோர், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் வழக்குரைஞர் திருமிகு மாரியப்ப முரளி , பைந்தமிழ் இலக்கிய பேரவை திரு.அதிவீர பாண்டியன் கவிஞர் திருமிகு ஆதிரா முல்லை ஆகியோர்.
இந்த நிகழ்வில் வளரி கவிதை இதழின் பெண்கள் சிறப்பிதழோடு இரண்டு நூல்கள் வெளியிடப்பட உள்ளன. ஒன்று மருத்துவர் தென்றலின் “பெண் எனும் போன்சாய்” மற்றும் சுதா மாணிக்கம் எழுதிய “எல்லாவற்றிலும் தொடரும்” ஆகியன.
இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் பெண் விடுதலை குறித்த கவியரங்கம் நடைபெறுகிறது . வளரி எழுத்துக்கூடம் பதிப்பில் சென்ற ஆண்டு மகடூஉ 100 பல நாடுகளில் வசிக்கும் நூறு பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு வெளியானது . அதில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்சினி, கவிஞர் செயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல புதிய பெண் கவிஞர்களின் படைப்புகளை தமிழ் அரங்கில் அறிமுகம் செய்து வரும் வளரி கவிதை இதழை நடத்தி வருபவர் கவிஞர்.அருணாசுந்தரராசன். கவிஞர் மீராவின் மாணவரான இவர் வளரி அமைப்பின் மூலம் 2013 முதல் ‘கவிப்பேராசான் மீரா விருது’ களை சிறந்த கவி ஆளுமைகளுக்கு வழங்கி வருகிறார்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.