தமிழகம்

மதுரையில் அண்ணனின் நினைவு தினத்தில் பொதுமக்களுக்கு உணவளித்து, ரத்ததானம் நடத்தி அஞ்சலி செலுத்திய தம்பிகளின் உணர்வுபூர்வமானசெயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

396views
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நல்ல மருது.இப்பகுதியில் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் சமூக சேவைகள் செய்துள்ளர்.
நல்ல மருது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
நல்ல மருது என்பவர்க்கு உடன் பிறந்த சகோதரர்கள் எஸ் ஆர் கோபி, போஸ் முத்தையா(திமுக கவுன்சிலர்), ஈஸ்வரன் என மூன்று தம்பிகள் உள்ளனர்.
அண்ணன் நல்ல மருது 2 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம், மீனாட்சிநகர் பகுதியில் ரத்த தான முகாமை நடத்தி 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்.
இதற்கு முன்னதாக நல்ல மருதுவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதி வசிக்கும் 5000 மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மதுரையில் அண்ணனின் உடன் பிறந்த அண்ணனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் பொதுமக்களுக்கு உணவளித்தும் , இரத்ததானம் வழங்கியும் அண்ணனின் நினைவு நினைவஞ்சலி செலுத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!