தமிழகம்

வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த கணவன், மனைவி திருப்பதி அருகே காரின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் உயிரிழப்பு

75views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி தொப்பளா மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (56) இவர் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணி செயலாளராக இருந்து வந்தார்.  இவரது மனைவி மகேஸ்வரி (48) இருவரும் காரில் நேற்று முன்தினம் காரில் திருப்பதி சென்றுவிட்டு காலையில் திருப்பதி – திருச்சானூர் ரோட்டில் கார்வேகமாக வந்தபோது எதிரில் ஹாலோ பிரிக்ஸ் ஏற்றிவந்த டிராக்டர் மீது மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பிரபாகரன், மகேஸ்வரி உயிரிழந்தனர்.
கார் டிரைவருக்கு 2காலும் பலத்த காயம் ஏற்பட்டது.  திருப்பதி காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பின்பு உடற்கூர்ஆய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  உயிரிழந்த இருவருக்கும் 3 பெண்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.  உறவினர் மற்றும் அம்முண்டி தொப்பளா மோட்டூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் மற்றும் காட்பாடி ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!