Uncategorizedதமிழகம்

மோப்ப நாயுடன் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சென்னைக்கு விரைந்தது – சென்னை கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக தீவிரம்

132views
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை 4வது பட்டாலினிலுருந்து சென்னை பாரிமுனை பகுதியில் 70ஆண்டு கால பழமையான 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க சென்னை அடையாறுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து 25 வீரர்கள் கொண்ட குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய 2 மோப்ப நாய்கள் மற்றும் 5 படை வீரர்கள் தொழில்நுட்ப வல்லுநர் படை குழுவினர் அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் சென்னை பாரிமுனைக்கு (19-4-2023) புறப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த இடங்களில் மோப்ப நாய்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக தேடும் பணியாற்றி இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!