தமிழகம்

மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை.சமயநல்லூரில் லாரி மோதியதில் சம்பவ இடத்தில்.லோடுமேன் பலி

201views
மதுரை செல்லூரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் அஜித்குமார்(22) லோடுமேன் வேலைக்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான சமயநல்லூரில் வாகனங்களை மறித்து அதில் ஏறி தினசரி லோடுமேன் வேலை பார்ப்பது வழக்கம் இன்று மதியம் லோடுமேன் வேலை பார்ப்பதற்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான சமயநல்லூரில் வாகனங்களை மறித்து வேலை கேட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார்.
வாகனங்களை மறிக்கும் போது லாரியின் டயரில் சிக்கி பலியான விஜயகுமாரின்.உடலை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது ஏற்கனவே இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்ற தனியார் வாகனம் தடுப்பு சுவரில் மோதியதில் பாட்டியும் பேரனும் பலியான நிலையில் அதே இடத்தில் அடுத்தடுத்து விபத்து நடந்தது பொது மக்களை அதிர்ச்சிக்கு ள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த தொடர் விபத்து குறித்து  சமயநல்லூர் போலீசார் விசாரணை. செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!