தமிழகம்

மேலூர் நான்கு வழிச்சாலையில் நெற்கதிர் அறுவடை செய்யும் இயந்திர வண்டி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

280views
மதுரை மேலூர் அருகே மலம்பட்டி நான்கு வழிச்சாலையில் நெற்கதிர் அறுவடை செய்யும் இயந்திர வண்டியின் மீது, சென்னையிலிருந்து நாகர்கோயில் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்தானது.
மேலூர் நான்கு வழிச்சாலையில் இயந்திர வண்டி ( யூ டர்ன்) திரும்பும் போது ஆம்னி பேருந்து மோதி விபத்தானது. ஒருவர் மட்டும் படுகாயடைந்தார். அதிர்ஷ்டவசமாக சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!