தமிழகம்

மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும், மணிப்பூர் மாநில முதல்வரை பதவி நீக்கம் செய்ய கோரியும், மஜக ஆர்ப்பாட்டம்

243views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர மஜக சார்பில் மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும், கலவரத்தை பற்றி வாய்திறக்காத பிரதமர் மோடியை கண்டித்தும், மணிப்பூர் மாநில பாஜக முதல்வரை பதவி நீக்கம் செய்ய கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரு நாள் இடைவெளியில் அறிவிக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மா.செயலாளர் முஹம்மத் உமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் முஹம்மத் அப்சல் வரவேற்புரை ஆற்றினார், தலைமை செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர் ஆர்ப்பாட்டத்தை தொகுத்து வழங்கினார், மா.பொருளாளர் சையத் நவாஸ் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

மா.செயலாளர்கள் சர்தார், கலீல் பாஷா, அய்யூப், ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மஜக வின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார்.  காங்கிரஸ் பேரியக்கத்தின் மா.தலைவர் முரளிதரன், திராவிடர் கழகத்தின் மா. தலைவர் சு. வனவேந்தன், மதிமுக மாநகர செயலாளர் ஈழம் குமரேசன், SDPI கட்சியின் மா.செயலாளர் ஷபியுல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மா. தலைவர் காதர் பாஷா, தமிழ்தேச குடியரசு இயக்க மா.செயலாளர் விக்னேஷ், மே 17 இயக்கம் மோகன் ராஜ், மக்கள் அதிகாரம் ரவிச்சந்தர், தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒப்புரவாளன், ஆகியோர் கண்டன உரை நிகழ்தினர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!