தமிழகம்

வி.ஏ.ஓ. படுகொலை கண்டித்து காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

80views
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இதனை கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தீனதயாளன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  வேலுர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணை தலைவர் அன்பரசன் உள்ளிட்ட காட்பாடி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!