தமிழகம்

புளியங்குடி நகராட்சியை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

58views
புளியங்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் 12, 14, 16 ஆகிய வார்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக்கூறி புளியங்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புளியங்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் மு.ஷேக் காதர் மைதீன், முகம்மது நயினார் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தரபாண்டியன், நகராட்சி ஆணையாளர் சுகந்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!