தமிழகம்

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் திமுக அரசின் வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

83views
தமிழகத்தில் திமுக அரசு சொத்து வரி, வீட்டு வரி,மின் கட்டணம் போன்றவற்றை கடுமையாக உயரத்தி உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் யூனியன் அலுவலகம் முன்பு திமுக அரசின் வீட்டு வரி, சொத்துவரி போன்ற வரி உயர்வை கண்டித்து செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் சிலை நகர் செயலாளர் பூமா ராஜா ,துரை தனராஜ் ,பண்பாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!