செய்திகள்விளையாட்டு

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கப் போகும் முக்கிய நட்சத்திர வீரர்! ரசிகர்கள் ஜாலி!

67views

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சை எடுத்து முடித்ததும் பல மாதங்கள் அவர் ஓய்வு எடுத்து வந்து நம் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக நிறைய போட்டிகளில் இந்திய அணிக்கு அவரால் பங்கெடுத்து விளையாட முடியாமல் போனது.

இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு போல அதே வேகத்தோடு பந்து வீச முடியவில்லை. பேட்டிங் மற்றும் செய்து வந்தார். அதன் பின்னர் நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பேட்டிங் மட்டுமே செய்து வந்தார்.

இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையில் ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாட இருக்கிறார். இலங்கையிலுள்ள கொழும்புவில் ஜூலை 13ம் தேதி தொடங்கப்பட்ட ஜூலை 25-ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடந்து முடிக்கப்பட உள்ளது.

இந்த தொடரில் அவரும் அவருடைய அண்ணன் குருனால் பாண்டியாவும் இணைந்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது வலை பயிற்சி ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முன்பு போல வேகமாக பந்து வீசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா உலக கோப்பை டி20 தொடர் நடைபெற இறப்பதற்கு முன்பாக தற்போது பந்துவீச தயாராகிவிட்டது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு விஷயத்தை இந்திய ரசிகர்கள் மத்தியில் கூறியிருந்தார். நிச்சயமாக உலகக் கோப்பை டி20 தொடரில் நான் பந்து வீசுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். தற்பொழுது அவர் கூறியபடியே உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுவதற்கு முன்பாகவே அவர் பந்து வீசுவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் முன்புபோல பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரிலும் இதேபோல பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யும் பட்சத்தில், உலக கோப்பை டி20 தொடரிலும் அவர் ஆல்ரவுண்டர் வீரராக செயல்படுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

அவர் முன்பு போலவே உலக கோப்பை டி20 தொடரில் ஆல்ரவுண்டர் வீரராக செயல்பட்டால், இந்திய அணியின் பலம் இன்னம் சற்று அதிகரிக்கும், எனவே இந்த சந்தோஷமான செய்தி தற்போது அனைத்து இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!