கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார் அவரது மகன்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த சங்கமித்ரா சாட்டர்ஜி (70) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது .
ஒருகட்டத்தில் , அவர் இறந்துவிடுவார் என்பதை அறிந்த மருத்துவர்கள் , யாருடனாவது பேச விருப்பமா எனக் கேட்டுள்ளனர் . அதற்கு , தனது மகன் சோஹம் சாட்டர்ஜியுடன் பேச விரும்புவதாக அவர் கூறினார் .
இதையடுத்து , சோஹம் சாட்டர்ஜியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்ட மருத்துவர்கள் , அவரது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி , மகிழ்ச்சியாக ஏதேனும் பேசுங்கள் எனக் கூறினர் . பின்னர் தாயும் , மகனும் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர் .
செல்போனில் மகனை பார்த்த மகிழ்ச்சியில் பேசிய சங்கமித்ரா , தனக்காக ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து , அவரது மகனும் பழைய இந்தி பாடல் ஒன்றை பாடினார் . அதனை உணர்ச்சி ததும்ப கேட்டுக் கொண்டிருந்த சங்கமித்ரா , சிறிது நேரத்தில் உயிரிழந்தார் .
இந்த வீடியோ காட்சியை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதற்கு லட்சக்கணக்கானோர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர் .
139views
You Might Also Like
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...
வேலூர் அடுத்த விருதம்பட்டியில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை திறந்துவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்...
வேலூரில் மீண்டும் சதம்
வேலூரில் இன்று வியாழக்கிழமை 100.9 டிகிரி வெய்யில் வாட்டியது.நேற்று முன்தினம் வேலூரில் 100.1 டிகிரி வெய்யில் பதிவானது. இதன் காரணமாக பகலில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கே.எம். வாரியார்...
வேலூர் அடுத்த புது வசூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா
வேலூர் அடுத்த புது வசூர் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை அளிக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட சமூகநல அலுவலர் உமா,...




