கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார் அவரது மகன்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த சங்கமித்ரா சாட்டர்ஜி (70) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது .
ஒருகட்டத்தில் , அவர் இறந்துவிடுவார் என்பதை அறிந்த மருத்துவர்கள் , யாருடனாவது பேச விருப்பமா எனக் கேட்டுள்ளனர் . அதற்கு , தனது மகன் சோஹம் சாட்டர்ஜியுடன் பேச விரும்புவதாக அவர் கூறினார் .
இதையடுத்து , சோஹம் சாட்டர்ஜியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்ட மருத்துவர்கள் , அவரது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி , மகிழ்ச்சியாக ஏதேனும் பேசுங்கள் எனக் கூறினர் . பின்னர் தாயும் , மகனும் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர் .
செல்போனில் மகனை பார்த்த மகிழ்ச்சியில் பேசிய சங்கமித்ரா , தனக்காக ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து , அவரது மகனும் பழைய இந்தி பாடல் ஒன்றை பாடினார் . அதனை உணர்ச்சி ததும்ப கேட்டுக் கொண்டிருந்த சங்கமித்ரா , சிறிது நேரத்தில் உயிரிழந்தார் .
இந்த வீடியோ காட்சியை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதற்கு லட்சக்கணக்கானோர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர் .
157views
You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அவனி மாடசாமி, முதுவை ஹிதாயத், பரம்பை இதயா பங்கேற்பு
களிமங்கலம் : மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் கல்விக் குழு சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 30.05.2026...
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக திருத்தேர் மலையை சுற்றிவந்தது
வேலூர் அடுத்த இரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது. இதன் 4-ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா கடந்த 22-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான வைகாசி...
வேலூர் மாவட்ட அமமுக செயலாளர் சதீஷ்குமார் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாலை, மரியாதை
வேலூர் மாவட்ட மாநகர அமமுக செயலாளராக சதீஷ்குமாரை, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்தார். இதனையெடுத்துவேலுர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆர்,பிடிஓ அலுவலக...




