சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross Country Race) போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர்.
மாணவிகள் தீபிகா, ஜெயராணி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் 14.09.2024 மற்றும் 15.09.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாவட்டம், நேதாஜி அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
19.06.2024 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று ரூ. 28000 பரிசுத்தொகை வென்றனர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவர்கள் நான்கு பேர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 03.09.2024 அன்று இராமநாதபுரம் இராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற செஸ் போட்டியில் மாணவியர் மூன்றாம் இடம் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியரை மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் பாராட்டினர்.
‘ஈஷா அறக்கட்டளை சத்குரு அவர்களால் யோகா மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை...
விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம்...
தஞ்சை பெரிய கோயிலில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்திக்கு அபிஷேகம் அலங்காரம் பின் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்....
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.