அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை நடத்திய இந்திய தேசிய 78 ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காணொளி நிகழ்ச்சி இன்று 17.08.2024 சனிக்கிழமை மாலை UAE நேரம் 7.30 மணி இந்திய நேரம் 09:00 மணிக்கு Zoom காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அமீரக மனிதநேய கலாச்சார பேரவையின் செயலாளர் A.R.Y.அப்துல் ரெஜாக் அவர்கள் தலைமை தாங்கினார்.அமீரக துணை செயலாளர் M.அப்துல் நாசர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,மாநில செயற்குழு உறுப்பினர் Dr.A.அசாலி அஹமது மற்றும் அமீரக தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இக்காணொளி நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுசெயலாளர் தோழர்.தியாகு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பாங்குகள் குறித்தும்,
வளரும் நம் தலைமுறைக்கு நமது தாய் மொழியின் அவசியத்தை சொல்லி வளர்க்கவும், இன்னும் பல்வேறு வரலாற்று குறிப்புகளை எடுத்துரைத்தும் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்புடன் நடைபெற்ற இக்காணொளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பொருளாளர் Z.ஃபயாஜ் அஹமது அவர்கள் நன்றி கூறினார்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.