தமிழகம்

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் – 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக மாநகராட்சி விளக்கம்

348views
மதுரை மாநகரில் போக்குவரத்து பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலையானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்க அமைக்கப்பட்ட இந்த புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அளவு சிரமப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் மதுரை அழகப்பன் நகர் பகுதியில் சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி இடம் சாலையோரமாக எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டிருந்த கேள்விக்கு,  மதுரை மாநகராட்சி நிர்வாகம் பழங்காநத்தம் முதல் ஆரப்பாளையம் வரை இருக்கக்கூடிய பைபாஸ் சாலையில் சுமார் 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் அளித்துள்ளது.

ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உரிய அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும்,  மேலும் மாநகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகும் புகார் எழுந்துள்ளது.  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!