இந்தியாசெய்திகள்

ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் கிரையோஜெனிக் எஞ்சினில் கோளாறு…திட்டம் தோல்வி – இஸ்ரோ தலைவர் சிவன்

53views

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பயணம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ராக்கெட்டின் கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் பொருத்தி இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் விண்ணில் பாய்ந்த உடன் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ராக்கெட்டின் பயணம் திட்டமிட்ட இலக்கை அடைய முடியவில்லை ஈ.ஓ.எஸ்.03 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்த இயலவில்லை.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ராக்கெட்டின் கிரையோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட சிக்கலால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று கூறினார். கிரையோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப் -10 திட்டம் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.

ஈ.ஓ.எஸ்.03 செயற்கைக்கோள் முதலில் கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செயற்கைக்கோள் செலுத்தப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.

ஜிசாட்-1 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது – என்னென்ன சிறப்பம்சங்கள்

பல மாதங்களுக்குப் பிறகு இன்று செலுத்தப்பட்ட ராக்கெட்டும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட 14 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் 4 ராக்கெட் திட்டங்கள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!