செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “என்னைப் பற்றிய செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் ’எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி காப்பீட்டு நிறுவனத்திடம் ஒரு கோடியே 3 லட்சம் கடன் பெற்றது. இந்த தொகையை திருப்பி செலுத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என நீதிமன்றம் லிங்குசாமிக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து லிங்குசாமி தரப்பில் ரூபாய் ஒரு கோடியே 3 லட்சத்து காசோலை தரப்பட்ட நிலையில் இந்த காசோலை வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாக செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக்,...
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
இங்கு மிருகங்கங்கள் வாழும் இடம் : திரை விமர்சனம் பொழுது போக்காக பார்க்கக் கூடிய சினிமாக்கள் சில நேரங்களில் நம்மை சமூக அக்கறையுடன் பார்க்க வைத்துவிடும். அப்படியொரு...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.