இந்தியா

32 ஆண்டு சேவைக்கு பின் ஐ.என்.எஸ்., குக்ரி கப்பலுக்கு ஓய்வு

48views

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., குக்ரி போர்க்கப்பலுக்கு 32 ஆண்டு சேவைக்கு பின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.’மஸகான் டோக் ஷிப் பில்டர்ஸ்’ நிறுவனம் தயாரித்த ஐ.என்.எஸ்.

குக்ரி போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் 1989 ஆக., 23ல் சேர்க்கப்பட்டது.இந்தக் கப்பல் இதுவரை 6 லட்சத்து 44 ஆயிரத்து 897 கடல் மைல் பயணம் செய்துள்ளது. இந்தக் கப்பலில் 28 தளபதிகள் பணிபுரிந்துள்ளனர். இதன் 32 ஆண்டுகால சேவைக்கு பின் ஓய்வு கொடுக்கும் நிகழ்ச்சி ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று முன் தினம் நடந்தது. அதிகாரிகள் பிஸ்வஜித் தாஸ் குப்தா, பி.என்.அனந்தநாராயணன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!