கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக பரவிவரும்நிலையில் 30 ஆம்புலன்ஸ்களை பாஜக எம்பி பதுக்கியுள்ளதாக அதிர்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைமிக வேகமாகப் பரவிவருகிறது. இதனால்மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம் பிவழிகின்றன. ஆக்ஸிஜன்பற்றாக்குறை போன்ற சிக்கல்களும் சிகிச்சை அளிப்பதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன.
அந்தவகைகளில் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதும் குதிரைக்கொம்பாக இருந்துவருகிறது.
இந்நிலையில்பீகார்மாநில பாஜக எம்பியும் அக்கட்சியின் செய்தித்தொடர் பாளருமான ராஜீவ் பிரதாப் ரூடியின் அலுவலகத்தில் 30 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரிக்கைகள் எழுந்துள்ளன.