செய்திகள்தமிழகம்

27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணமும் அதற்கான விதை போட்டதும் நாங்கள் தான் ..!!

77views

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணம் அதிமுக தான் எனவும் அதற்கான விதை நாங்கள் போட்டது என்றார். இட ஒதுக்கீட்டிற்காக அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொண்டதாகவும், அதிமுக தொடர்ந்த வழக்கிலேயே மற்ற கட்சிகள் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் துரும்பை கூட எடுத்து போடாத திமுக வரலாற்றை திசைதிருப்புவதாகவும் கூறினார்.

மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தது எனவும், இனி இது போன்ற சம்பவங்கள் அதிமுக எம்.பிக்கள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவார்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!