தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொலைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஸ்டொலைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த தொழிநுட்ப குழுவினரும் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் சனிக்கிழமை முதல் இஸ்ரோ குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
85views
You Might Also Like
வேலூர் அடுத்த காட்பாடியில் தனியார் பள்ளி பஸ்களின் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் தனியார் சன்பீம் பள்ளி மைதானத்தில் தனியார் பள்ளிகளின் பஸ்களை கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார போக்குவரத்து...
தனியார் பள்ளி ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தனியார் பள்ளி பஸ்களின் தரத்தை ஆய்வு செய்தபின் கலெக்டர் சுப்புலெட்சுமி முன்னிலையில் காட்பாடி பையர் ஆபீசர்...
சித்திரா பெளர்ணமியில் முழுநிலவுடன் ஜொலிக்கும் திருஅண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் சித்திரை மாத பெளர்ணமி முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கிரிவலம் செய்துவருகின்றனர். வண்ண விளக்குகளுடன் கோயிலுக்கு ஈடாக முழு பெளர்ணமி நிலவு கோயிலுக்கு மேலும்...
பிரம்மபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரா பெளர்ணமி முன்னிட்டு பூஜை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சித்திரை மாத பெளர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரமும், உற்சவர்க்கு விசேஷ பூஜையும் நடந்தது.பின்பு அன்னதானம்...
கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரையில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடந்தது.பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா, கோவிந்த...