சினிமா

வாரிசு இயக்குனர் வம்சியால் கடும் அப்சட்டில் தளபதி.காரணம் இதுதான்..!

60views
விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சியின் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தமன் இசையமைக்க ராஷ்மிகா நாயகியாக நடித்து வருகின்றார். முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஹோம் & அப்ளையன்சஸ் – வாஷிங் மசின்ஸ் , குளிர்சாதன பெட்டி மற்றும் பலவற்றில் 70% வரை தள்ளுபடி
மேலும் இப்படம் விஜய்யை ரசிகர்களுக்கு புது விதமாக காட்டும் என்று படக்குழு தரப்பிலிருந்து தகவல்கள் வந்தன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு தற்போது பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றது.
இது ஒருபுறமிருக்க விஜய் இப்படத்தை எடுத்த வரை சமீபத்தில் பார்த்ததாகவும், அவருக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் இயக்குனர் வம்சி தூக்கமின்மை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரை மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன் காரணமாக ஓய்வில் இருந்த வம்சி தற்போது மீண்டும் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். தற்போது விஜய்யிடம் மேலும் 40 நாட்கள் கால் சீட் கேட்டுள்ளாராம் வம்சி. முதலில் விஜய்யிடம் 105 நாட்களில் படத்தை முடிப்பதாக கூறி கால் சீட் வாங்கியுள்ளார் வம்சி.
ஆனால் விஜய்யின் 105 கால் சீட் முடிந்த பிறகும் இன்னும் சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாம். எனவே தான் விஜய்யிடம் மேலும் ஒரு 40 நாட்கள் கால் சீட் கேட்டுள்ளார் வம்சி. இதன் காரணமாக இயக்குனர் வம்சியின் மீது விஜய் கடும் அப்சட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்து

Right Click & View Source is disabled.

error: Content is protected !!