ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்?
95
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தை முக்கிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். அனிரூத் இசை அமைக்கவுள்ள இந்த திரைப்படத்தை, ரஜினிகாந்தின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட நட்சத்திரம் சிவக்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துவிட்டு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்படிப்பு ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் என கூறியிருந்தார். எனவே, ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்டை தான் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கூறிவருகின்றனர்.