நிகழ்வு

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டம்

104views
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ,சென்னை குளத்தூர் ஜி.கே.எம் காலனியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அண்மையில் இரங்கல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய குடியரசு கட்சி தலைவர் டாக்டர் செ கு தமிழரசன், அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் திரு இள முருகு முத்து ஆகியோர் தலைமை தாங்கினார்.
மக்கள் நீதி மையம் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் திரு செந்தில் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் காவல் துறை ஆய்வாளர் டாக்டர் நாஞ்சில் எஸ் தாம்சன்,
அனைத்து இந்திய SC/ST கூட்டமைப்பு சம்மேளன மாநில தலைவர் திரு Agri கருப்பையா, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் மு தணிகைவேல் இந்த இரங்கல் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!