இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,051 பேருக்கு கொரோனா

244views

மும்பை: மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,501 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 23,29,464 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,671 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 21,44,743 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 52,909 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 1,30,547 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு குணமடைவோர் விகிதம் 92.07 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.27 சதவிகிதமாக உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!